Sunday, November 4, 2007

இருட்டுக் காட்டில்...

இருட்டுக் காட்டில்

மலையருவி


கண்களை மூடு
விழிகளைப் புதை

பார்வைப் பூக்களை
வெளிச்சப் பருந்துகள்
கவர விருப்பதைக்
கருத்தில் நிறுத்து

கண்களின் கற்பைக் காக்க
இயற்கைக் காட்சியில்
இரண்டறக் கலந்து
காட்சிக் கருவைச் சுமந்து வா!

மின்ஒளி விலங்குகள்
சுற்றிச் சீறும்
பாழ் நகருக்குப்
பயந்து ஒதுங்கி
இருட்டுக் காட்டில்
வாழ்வைத் தொடங்கு

No comments: