Showing posts with label ஹைக்கூ. Show all posts
Showing posts with label ஹைக்கூ. Show all posts

Sunday, November 18, 2007

துளித் துளியாய்...(2)

துளித் துளியாய்...(2)

கையில் உளி
கண்ணில் பசி
உருவாகும் சிற்பம்

கையில் உளி
கண்ணில் குருதி
சிதைந்த சிற்பம்

எழுத்தில் கரையும்
தொடுவானம்
எழுதியவன் வாழ்வு

அருகருகே அலைபேசிகளாய்க்
கணவன் மனைவி
மனங்களோ தொடர்பு எல்லைக்கு அப்பால்

துளித் துளியாய்...

துளித் துளியாய்...

யுகங்களாய்ச் சுழலும்
புவியின் வியர்வை
உப்புக் கடல்

சூரிய அகலைச்
சுற்றும் விட்டில்
பூமி

நிலவு அப்பளம் கடித்து வீசி
விண்மீன் பருக்கைகள் சிதறி
சாப்பிட்டெழுந்த குழந்தை யார்?

குடிசையின் பொத்தல்கள் வழியே
சூரியக்கிழவனின்
நரைமுடிகள்