Sunday, November 29, 2009

அடச்சீ! இதுக்கா பெத்தீங்க?

மலையருவி (முனைவர் நா.இளங்கோ)

பிரசவ அறைக்கு
உள்ளே
மகவு ஈனும்
தாயின்
வேதனை முனகல்

வெளியே
கணவன்,
உற்றார் உறவினர்
நட்பு வட்டம்

வெடிக்கும் வேதனையின்
கதறலைத் தொடர்ந்தது,
குழந்தையின்
மெல்லிய அழுகையொலி.

தேனாய் இனித்தது.

காத்திருந்தோருக்குக்
கற்கண்டாய்ச்
சேதி!
தாயும் சேயும் நலம்!

குழந்தைக்குப் பெயர்?
சூட்டி மகிழ
தாய், தந்தை
தாத்தா, பாட்டி
உறவு, நட்பு
ஆயிரமிருந்தும்

ஓடு! ஜோசியக்காரனிடம்,

என்ன பெயர் வைக்க?
நட்சத்திரப்படி,
ரி, ரீ, லு, லூ
எனத்தொடங்கும் பெயர்வை!
இதுவோ? இது போன்றோ?

எழுத்து இத்தனைதான்!
கூட்டினால்
எழுத்தெண்ணிக்கை
இத்தனை? வரவேண்டும்.

தமிழில் பெயர்!
ஆகவே ஆகாது

அடச்சீ!
இதுக்கா பெத்தீங்க?

கருவறைகளும் காமக் களியாட்டங்களும்

மலையருவி

காமத்தை விட்டொழிக்க
பக்தர்கள் ஆனதெல்லாம்
பழைய கதை

பக்தி மீதூற
கடவுளைக் காமுற்று
கவிதைகள் பாடியதும்
கடந்த காலம்

காம வெறியேற
கடவுள் துணையோடு
பக்தைகளை மேய்வதுவே
புதிய கதையாச்சு

கருவறைகள்
கடவுள் இருப்பிடமாம்

எட்டிப் பார்த்து
கும்பிட்டு
தட்சணை கொடுக்க மட்டும்
பக்தர்கள்

பக்தைகளுக்கு
ஆண்டவன் ஆசியோடு
குருக்கள் குதூகலிக்க
அனுமதி!

புனிதம்! புனிதம்!!

காஞ்சிபுரத்து
தேவநாதன்கள்
கருவறைகள் தோறும்!

எங்கே கடவுள்?