Monday, May 7, 2012

காமமும் கடவுளும்

மலையருவி (முனைவர் நா.இளங்கோ)

சலிப்பு,
ஓயாத சலிப்பு,
வாழ்க்கையே சலிப்பூட்டுவதாய்..

வெறுமை,
எங்கும் வெறுமை,
வாழ்க்கையே வெறுமையாய்..

துன்பம்,
தீராத துன்பம்,
வாழ்க்கையே துன்பமயமாய்..

சலிப்பின்-
வெறுமையின்-
துன்பத்தின்- உச்சத்தில்

இமைமூடித் திறந்த 
கணப்பொழுதில்
புதிய வெளிச்சம்
புதிய சுவாசம்
புதிய நான்

சலிப்பின் முடிவில் 
ஈர்ப்பு.
வெறுமையின் முடிவில்
முழுமை.
துன்பத்தின் உச்சத்தில்
இன்பம்.

நாட்டம் 
எங்கும் எதிலும் நாட்டம்
அன்பு 
அனைத்தையும் நேசிக்கும் அன்பு

காதல்
காமம்
கடவுள்
வாழ்க்கையின்
ஒவ்வொரு துளியிலும்..