Sunday, November 18, 2007

துளித் துளியாய்...

துளித் துளியாய்...

யுகங்களாய்ச் சுழலும்
புவியின் வியர்வை
உப்புக் கடல்

சூரிய அகலைச்
சுற்றும் விட்டில்
பூமி

நிலவு அப்பளம் கடித்து வீசி
விண்மீன் பருக்கைகள் சிதறி
சாப்பிட்டெழுந்த குழந்தை யார்?

குடிசையின் பொத்தல்கள் வழியே
சூரியக்கிழவனின்
நரைமுடிகள்

1 comment:

முபாரக் said...

நல்லாயிருக்கு உங்கள் எழுத்துக்களும், ஆய்வுகளும்...

வாழ்த்துகள்

வணக்கத்துடன்,
முபாரக்