Sunday, November 4, 2007

எங்கே கவிதை?

எங்கே கவிதை?

அதைத் தேடி
இதைத் தேடி
தேடித் தேடித் தேய்ந்தேன்

சொற்களை நிறுத்திச்
சுமைகளை ஏற்றினேன்

நகர மறுத்தன

உத்திகளாலே குத்தித் தள்ளி
அணிகளாலே நையப் புடைத்து
மெல்ல நகர்த்தினேன்

சொற்கள் செத்தன.

மீண்டும் மீண்டும்
கவிதை தேய்ந்தது

கடைசி முயற்சியாய்
எனக்குள் பயணம்
என்னை அடைய…

எங்கே கவிதை?

No comments: