Monday, May 23, 2011

யார் யாருக்குக் காவல்?

மலையருவி (முனைவர் நா.இளங்கோ)


பெருமாளுக்குப்
பக்தர்களின் காணிக்கை
அவரவர்
பணம் செல்வாக்கிற்கேற்பப்
பலரகம்

வேண்டுதல்,
நேர்த்திக் கடன்,
காணிக்கை,
பகவானுக்கு ஒரு பங்கு
என விரியும்

காசு, ரூபாய்களில்,
முடி காணிக்கை, மொட்டை,
வசதிக்கேற்ற பொருளில்
எடைக்கு எடை துலாபாரம்.

உண்டியல் காணிக்கை
நூறு ஆயிரங்களில் தொடங்கி
இலட்சம் கோடிகளில்
செய்பாவங்களுகேற்ப
வினைத் தொகையாய்
பங்குகள் கூடும்.

வெள்ளி, தங்கம், வைரங்களில்
வாள், கிரீடம்,
அண்டா, குண்டா
தேர், கலசம், கோபுரம்
என
அன்பளிப்புக் காணிக்கைகள்
தொடரும்..

சில,
பெயர் விளம்பும்
விளம்பரங்களுடன்

புகழ் விரும்பா
புண்ணியர்கள் சிலர்
ரகசியமாய்
விளம்பரமின்றி.

கடவுளின்
காணிக்கைகளைக் காக்க
ப+ட்டு, பெரிய பூட்டு, மெகா பூட்டு
இரவு பகல் பராமல்
போலீஸ் காவல்
கண்காணிப்புக் கேமராக்கள்

என்ன செய்ய?
அவ்வப்போது
உண்டியல் உடைப்பு,
காவலாளியைக் கொன்று
கோயில் நகை திருட்டு,
பக்தர்கள்,
பூசாரி
அறங்காவலர் திருட்டுகள்

சமயங்களில்
உடைமைகள் மட்டுமின்றி
பகவானே திருட்டு போகும்
பரிதாபம்

காக்கும் பெருமாளே!
உண்மையைச் சொல்லும்
யார் யாருக்குக் காவல்?
