Thursday, June 9, 2011

சாதி அரசியல்

மலையருவி (முனைவர் நா.இளங்கோ)


பெண்ணியம் பேசினான்,
எழுதினான்,
மேடைகளில் முழங்கினான்.
ஆண்கள் போராடி
பெண்ணுக்கு விடுதலையா?

பெண்கள் எதிர்த்தனர்,
எங்கள் விடுதலையை
நாங்கள்
பார்த்துக் கொள்கிறோம் என்று.

தலித்தியம் பேசினான்,
எழுதினான்,
போராடினான்.

தலித்தின் வலி
உனக்குத் தெரியுமா?
வேண்டாம்
ஓநாய் அழுகை என்றனர்.

இப்போது
ஒடுக்கப்பட்ட
தன் சொந்த சாதிக்காக
எழுதுகிறான்.

சொல்கிறார்கள்,
அவன் சாதி அரசியல்
பண்ணுகிறான் என்று!