மலையருவி
(முனவர் நா.இளங்கோ)
புதுச்சேரி-8
உலகம்
மேசைக்குள் அடங்கி
நம் மடிக்குள்ளும்
அடங்கிவிட்டதா?
இன்று
கணினி இல்லாத இடமேது?
செய்யாத பணியேது?
எழுத,
கணக்குப் போட,
படம் வரைய,
பாட்டுக் கேட்க,
திரைப்படம் பார்க்க
எல்லாமாகிப் போன
கணினி
வேகம், அதிவேகம்,
துல்லியம், நம்பகம்
அளவற்ற கொள்ளிடம்
எல்லாவற்றிலும்
மனிதனை மிஞ்சும்
மாயப் பெட்டகம்.
இணைய வலையில்
சிக்கிய மீன்களாய்
மனிதர்கள்
எதையும் தேடுபொறிகளில்
தேடிக்கொள்ளும்
விரல்களும் விழிகளும்
மின் அஞ்சல்,
இணைய வழி-
பார்க்க, பேச.
உரையாட, உறவாட
முகங்கள் அற்ற
இணைய வெளியில்
நீங்களும் நானும்
கணினிப் புரட்சி
எங்கும் எதிலும்
இடைவெளி,
தூரம், தொலைவுகள் இல்லாத
உலகம்
நாளை
மனிதர்களை
நட்பை, உறவை,
பாசத்தை, அன்பை
மீட்டெடுக்குமா
கணினிப் புரட்சி.
Sunday, November 28, 2010
சுற்றுச் சூழல் உன் சுற்றம் -
மலையருவி
(முனைவர் நா.இளங்கோ)
பேரண்டத்தின் ஒரு துகளாம்
பூமிப் பந்து
ஆயிரம், இலட்சம்
கோடி, கோடானுகோடி ஆண்டுகளாய்
எரிந்து கொதித்து
குளிர்ந்து நனைந்து
நிலமாகி
வளிதோன்றி
நீர் சூழ்ந்து
நீர்ப்பாசியாகி
செடியாகி கொடியாகி மரமாகி
ஊர்வனவும் பறப்பனவும்
நடப்பனவும் ஆகிநின்ற
பல்லுயிர்ப் பெருக்கத்தின்
விளைநிலம்.
இயற்கை எனும்
இன்முகம் காட்டிய
இவ்வுலகு
மனித விலங்குகளால்
நீரும் கெட்டு
நிலமும் கெட்டு
காற்றும் கெட்டுக்
களையிழந்த தேனோ?
சுற்றுச் சூழல் உன் சுற்றம்
மனிதா!
பூமி
உனக்கு மட்டும் சொந்தமல்ல
கோடிக்கணக்கான
தாவர, பறவை, விலங்குகளின்
தாய்மண்
இயற்கை
உலகின் இதயம்
நிலத்தை, நீரை, காற்றைப்
பயன்படுத்து
பாழ்பாடுத்தாதே!
(முனைவர் நா.இளங்கோ)
பேரண்டத்தின் ஒரு துகளாம்
பூமிப் பந்து
ஆயிரம், இலட்சம்
கோடி, கோடானுகோடி ஆண்டுகளாய்
எரிந்து கொதித்து
குளிர்ந்து நனைந்து
நிலமாகி
வளிதோன்றி
நீர் சூழ்ந்து
நீர்ப்பாசியாகி
செடியாகி கொடியாகி மரமாகி
ஊர்வனவும் பறப்பனவும்
நடப்பனவும் ஆகிநின்ற
பல்லுயிர்ப் பெருக்கத்தின்
விளைநிலம்.
இயற்கை எனும்
இன்முகம் காட்டிய
இவ்வுலகு
மனித விலங்குகளால்
நீரும் கெட்டு
நிலமும் கெட்டு
காற்றும் கெட்டுக்
களையிழந்த தேனோ?
சுற்றுச் சூழல் உன் சுற்றம்
மனிதா!
பூமி
உனக்கு மட்டும் சொந்தமல்ல
கோடிக்கணக்கான
தாவர, பறவை, விலங்குகளின்
தாய்மண்
இயற்கை
உலகின் இதயம்
நிலத்தை, நீரை, காற்றைப்
பயன்படுத்து
பாழ்பாடுத்தாதே!
Friday, August 6, 2010
பேரண்டமும் நானும் -மலையருவி-
அடடே
செவ்வாய் தோஷம்!
பரிகாரம் பண்ணு
மகாலட்சுமியாட்டம் பொண்ணு வருவா?
பேர்ல ஒரு A கூட சேர்த்துக்க!
அப்பத்தான்
கூட்டுத்தொகை 2 -ல வரும்
அப்புறம் பாரு
கலக்டர் உத்தியோகம்தான்?
ஒன்னோட ராசிக்கு
நீலமே ஆகாது
அதக்கழட்டு மொதல்ல!
பச்சக்கல்லப் போட்டுப்பாரு
கூரையைப் பிச்சிகிட்டு கொட்டும்?
வாசக்காலு வச்ச
திசையே சரியில்ல!
ம்.. அப்பறம்
அடுப்பங்கரையை மாத்து!
தென்கிழக்குத்தான்
அக்கினி மூலை
மகாராசனாட்டம் பவனிவருவ?
சித்தன்மல பீர்சாமியார
ஒருதடவைப் பார்த்து
தட்சனை கொட்டி
கும்பிட்டு வந்தா
கோடி கோயிலை சுத்துன புண்ணியம்?
தோஷம், பரிகாரம்
ராசி, வாஸ்து
சாமி, தட்சணை
ஓயாத இரைச்சல்களுக்கு நடுவே!
பேரண்டப் புழுதியின் துகள்கள்!
வானக் கடலின் துளிகள்!
துகள்கள்
துளிகளின்
உள்ளியங்கும் பேரண்டம்.
இடவலமற்று
திசைகளற்று
மொழியற்று
வடிவுகளற்று
நிறமற்று
வேடங்களற்ற
பேரண்டம்
என்னுள் தொடங்கி பேருருக் கொள்ளும்
என்னும் அடங்கி சூக்குமமாகும்
பேரண்டமும் நானும் ....
-மலையருவி-
செவ்வாய் தோஷம்!
பரிகாரம் பண்ணு
மகாலட்சுமியாட்டம் பொண்ணு வருவா?
பேர்ல ஒரு A கூட சேர்த்துக்க!
அப்பத்தான்
கூட்டுத்தொகை 2 -ல வரும்
அப்புறம் பாரு
கலக்டர் உத்தியோகம்தான்?
ஒன்னோட ராசிக்கு
நீலமே ஆகாது
அதக்கழட்டு மொதல்ல!
பச்சக்கல்லப் போட்டுப்பாரு
கூரையைப் பிச்சிகிட்டு கொட்டும்?
வாசக்காலு வச்ச
திசையே சரியில்ல!
ம்.. அப்பறம்
அடுப்பங்கரையை மாத்து!
தென்கிழக்குத்தான்
அக்கினி மூலை
மகாராசனாட்டம் பவனிவருவ?
சித்தன்மல பீர்சாமியார
ஒருதடவைப் பார்த்து
தட்சனை கொட்டி
கும்பிட்டு வந்தா
கோடி கோயிலை சுத்துன புண்ணியம்?
தோஷம், பரிகாரம்
ராசி, வாஸ்து
சாமி, தட்சணை
ஓயாத இரைச்சல்களுக்கு நடுவே!
பேரண்டப் புழுதியின் துகள்கள்!
வானக் கடலின் துளிகள்!
துகள்கள்
துளிகளின்
உள்ளியங்கும் பேரண்டம்.
இடவலமற்று
திசைகளற்று
மொழியற்று
வடிவுகளற்று
நிறமற்று
வேடங்களற்ற
பேரண்டம்
என்னுள் தொடங்கி பேருருக் கொள்ளும்
என்னும் அடங்கி சூக்குமமாகும்
பேரண்டமும் நானும் ....
-மலையருவி-
Tuesday, March 2, 2010
நித்தியானந்தர்களின் நித்திய ஆனந்த லீலா விநோதங்கள்
நித்தியானந்தர்களின் நித்திய ஆனந்த லீலா விநோதங்கள்
மலையருவி
சாமியார்கள்
இரண்டுவகை
முதல்வகை,
போலிச் சாமியார்கள்.
இரண்டாம்வகை,
லீலைகள் இன்னும்
அம்பலமாகாத சாமியார்கள்
யாரைச்சொல்லி
யாரைநோக!
ஒருபாதி
மக்களின் அறியாமையும்
மறுபாதி
மக்களின் பேராசையுமே
இந்தப் போலிகளுக்கு
மூலதனம்
ஆண்டவன் பேரால்
நடக்கும்
அநாகரீகங்களும்
அநியாயங்களும்
அங்கீகரிக்கப்படுவது
எதனால்?
மதத்தின் பெயரால்!
ஒழிக்கப்பட வேண்டுவன எவை?
சாமியார்களா?
மதங்களா?
மலையருவி
சாமியார்கள்
இரண்டுவகை
முதல்வகை,
போலிச் சாமியார்கள்.
இரண்டாம்வகை,
லீலைகள் இன்னும்
அம்பலமாகாத சாமியார்கள்
யாரைச்சொல்லி
யாரைநோக!
ஒருபாதி
மக்களின் அறியாமையும்
மறுபாதி
மக்களின் பேராசையுமே
இந்தப் போலிகளுக்கு
மூலதனம்
ஆண்டவன் பேரால்
நடக்கும்
அநாகரீகங்களும்
அநியாயங்களும்
அங்கீகரிக்கப்படுவது
எதனால்?
மதத்தின் பெயரால்!
ஒழிக்கப்பட வேண்டுவன எவை?
சாமியார்களா?
மதங்களா?
Saturday, January 30, 2010
சாகும் வரைக்கும் வேண்டும் வேலை!
சாகும் வரைக்கும் வேண்டும் வேலை!
மலையருவி (முனைவர் நா.இளங்கோ)
தேய்த்த நாற்காலிகளை
விட்டுவிட
மனம் வரவில்லை
வயதான காலத்தில்
புது இடத்தில் நிம்மதியான
தூக்கம் வராதாம்
வீட்டில்
காய்கறி மளிகை ரேஷன்
வாங்கிச் சுமக்கும்
சிக்கலில் சிக்காமல்
தப்பிக்க நல்ல வழி
நாற்காலி
கேண்டீன்
கழிப்பறை
பழகிப்போனவைகள்
பணிஓய்வுக்குப் பின்னும்
பணி நீட்டிப்பு
வீட்டில் இருக்கும்
அந்தத் தெண்டத் தீவட்டி
மகனுக்கு
எம்பளாய்மண்ட் நியூஸ் பேப்பர்
மறக்காமல் வாங்கனும்
மலையருவி (முனைவர் நா.இளங்கோ)
தேய்த்த நாற்காலிகளை
விட்டுவிட
மனம் வரவில்லை
வயதான காலத்தில்
புது இடத்தில் நிம்மதியான
தூக்கம் வராதாம்
வீட்டில்
காய்கறி மளிகை ரேஷன்
வாங்கிச் சுமக்கும்
சிக்கலில் சிக்காமல்
தப்பிக்க நல்ல வழி
நாற்காலி
கேண்டீன்
கழிப்பறை
பழகிப்போனவைகள்
பணிஓய்வுக்குப் பின்னும்
பணி நீட்டிப்பு
வீட்டில் இருக்கும்
அந்தத் தெண்டத் தீவட்டி
மகனுக்கு
எம்பளாய்மண்ட் நியூஸ் பேப்பர்
மறக்காமல் வாங்கனும்
Thursday, December 31, 2009
இவ்விடம் யாவரும் நலம்!
மலையருவி (முனைவர் நா.இளங்கோ)
அன்பு மகன் சிரஞ்சீவிக்கு,
இவ்விடம் யாவரும் நலம்!
நீ அனுப்பிய பணம் கிடைத்தது.
அம்மாவுக்கு
ஆஸ்துமா தொல்லை அதிகமாகிவிட்டது
தூக்கமில்லை
மூச்சுவிட அதிக சிரமப்படுகிறார்
இருந்தாலும்
வீட்டுவேலைகளெல்லாம் அவள் தலையில்தான்
என்ன செய்ய!
உன்மனைவி
உன் மாமனாருக்கு உடம்பு சரியில்லையாம்
அவள் வீட்டுக்குப் போய்விட்டாள்!
எனக்கு
வழக்கம் போல்தான்!
இப்போ கொஞ்சம் கொஞ்சம்
தட்டுத் தடுமாறி நடக்க முயற்சிக்கிறேன்!
சக்கரையைக் கட்டுக்குள் வைத்திருக்கிறேன்
பி.பி.தான் அப்பப்போ ஏறிவிடுகிறது
கால்காயம் ஆறிவருகிறது
நீ உன் உடம்பைப் பார்த்துக்கொள்
இவ்விடம் யாவரும் நலம்!!
தைரியத்துடன் அப்பா
வைத்தியநாதன்
அன்பு மகன் சிரஞ்சீவிக்கு,
இவ்விடம் யாவரும் நலம்!
நீ அனுப்பிய பணம் கிடைத்தது.
அம்மாவுக்கு
ஆஸ்துமா தொல்லை அதிகமாகிவிட்டது
தூக்கமில்லை
மூச்சுவிட அதிக சிரமப்படுகிறார்
இருந்தாலும்
வீட்டுவேலைகளெல்லாம் அவள் தலையில்தான்
என்ன செய்ய!
உன்மனைவி
உன் மாமனாருக்கு உடம்பு சரியில்லையாம்
அவள் வீட்டுக்குப் போய்விட்டாள்!
எனக்கு
வழக்கம் போல்தான்!
இப்போ கொஞ்சம் கொஞ்சம்
தட்டுத் தடுமாறி நடக்க முயற்சிக்கிறேன்!
சக்கரையைக் கட்டுக்குள் வைத்திருக்கிறேன்
பி.பி.தான் அப்பப்போ ஏறிவிடுகிறது
கால்காயம் ஆறிவருகிறது
நீ உன் உடம்பைப் பார்த்துக்கொள்
இவ்விடம் யாவரும் நலம்!!
தைரியத்துடன் அப்பா
வைத்தியநாதன்
Wednesday, December 30, 2009
செம்மொழியும் இரத்தவாடையும்
மலையருவி (முனைவர் நா.இளங்கோ)
என் அறை முழுவதும் செம்மொழி?
செய்தித்தாள்களில்
வானொலியில்
தொலைக்காட்சியில்
அறிவிப்புகள்
அறிக்கைகள்
தினம் தினம்..
என்னைச் சுற்றி..
தொல்காப்பியம்
சங்க இலக்கியம்
திருக்குறள்
சிலப்பதிகாரம்
இன்னபிற..
படித்து முடித்தது
படிக்கப் போவது
குறிப்பெடுக்க அடையாளமிட்டது
ஒப்பிட்டுப் பார்த்தது
உரை தேடிக்கொண்டிருப்பது
விளங்காத பகுதிக்கு வினாக்குறியிட்டது
எனத் தொடர்கிறது..
மார்க்சிய, தமிழ்த்தேசிய
பெண்ணிய, தலித்திய
நவீனத்துவ, பின் நவீனத்துவ
இன்னபிற பார்வைகளால்
ஆய்வு புதுமெருகேறுகிறது
பாணர்களும்
விறலியர் கூத்தர் பொருநர்களும்
அடிக்கடி கனவில் வந்துபோகிறார்கள்
சேர, சோழ, பாண்டிய வேந்தர்களாய்
நானே!
சில பொழுதுகளில் முடிதரித்துக்கொள்கிறேன்
இருந்தாலும் நான் என்ன செய்ய?
என் ஆய்வுச்சுவடிகளில்
அடிக்கடி இரத்தவாடை வீசுகிறது!
இரத்தமும் நிணமுமாய்
சிதறிய மாமிசத்துண்டுகள்!
தீய்ந்து கருகிய உடல்கள்!
நெருப்பு, பெருநெருப்பு!
புகை, வானை முட்டிய புகை!
கொத்துக் கொத்தாய்ப் பிணக் குவியல்!
மரண ஓலங்களுக்கிடையே
செம்மொழிப்
புலவர்களின்! பாணர்களின்!
பாடல்கள் தெளிவாகக் கேட்கவில்லை
பிஞ்சுக் குழந்தைகளின்
பெண்களின்
வீரர்களின் சடலங்களுக்கிடையே
வேந்தர்களும் வள்ளல்களும்
காணாமல் போனார்கள்!
என் அறை முழுவதும்.. .. ..
என் அறை முழுவதும் செம்மொழி?
செய்தித்தாள்களில்
வானொலியில்
தொலைக்காட்சியில்
அறிவிப்புகள்
அறிக்கைகள்
தினம் தினம்..
என்னைச் சுற்றி..
தொல்காப்பியம்
சங்க இலக்கியம்
திருக்குறள்
சிலப்பதிகாரம்
இன்னபிற..
படித்து முடித்தது
படிக்கப் போவது
குறிப்பெடுக்க அடையாளமிட்டது
ஒப்பிட்டுப் பார்த்தது
உரை தேடிக்கொண்டிருப்பது
விளங்காத பகுதிக்கு வினாக்குறியிட்டது
எனத் தொடர்கிறது..
மார்க்சிய, தமிழ்த்தேசிய
பெண்ணிய, தலித்திய
நவீனத்துவ, பின் நவீனத்துவ
இன்னபிற பார்வைகளால்
ஆய்வு புதுமெருகேறுகிறது
பாணர்களும்
விறலியர் கூத்தர் பொருநர்களும்
அடிக்கடி கனவில் வந்துபோகிறார்கள்
சேர, சோழ, பாண்டிய வேந்தர்களாய்
நானே!
சில பொழுதுகளில் முடிதரித்துக்கொள்கிறேன்
இருந்தாலும் நான் என்ன செய்ய?
என் ஆய்வுச்சுவடிகளில்
அடிக்கடி இரத்தவாடை வீசுகிறது!
இரத்தமும் நிணமுமாய்
சிதறிய மாமிசத்துண்டுகள்!
தீய்ந்து கருகிய உடல்கள்!
நெருப்பு, பெருநெருப்பு!
புகை, வானை முட்டிய புகை!
கொத்துக் கொத்தாய்ப் பிணக் குவியல்!
மரண ஓலங்களுக்கிடையே
செம்மொழிப்
புலவர்களின்! பாணர்களின்!
பாடல்கள் தெளிவாகக் கேட்கவில்லை
பிஞ்சுக் குழந்தைகளின்
பெண்களின்
வீரர்களின் சடலங்களுக்கிடையே
வேந்தர்களும் வள்ளல்களும்
காணாமல் போனார்கள்!
என் அறை முழுவதும்.. .. ..
Subscribe to:
Posts (Atom)
