முனைவர் நா.இளங்கோ
இனி வரப்போகும் ஒருநாளில்,
நேர்முகத் தேர்வு நடந்து முடிந்தது.
வல்லுநர் குழு
வட்டமாய் அமர்ந்து
முந்திரி கொறித்து
வேலைக்களத்தில்
வென்ற நபரை
அறிவிக்க முனைந்தது
மாநிலத்தில்
நெருக்கடி,
மத்தியில் ஆளும்
தேசியக் கட்சியோடு
ஒத்துப்போகாத
மாநிலஆட்சி கலைக்கப்பட்டு
குடியரசுத் தலைவர் ஆட்சி!
சிக்கலே அதனால்தான்!
இருப்பது ஒருபதவி
யாருக்குக் கொடுப்பது?
ஜெயலலிதா சிந்தனைகளில்
முதுகல்வி முடித்து
சசிகலாவில்
முனைவர் பட்டம் முடித்தவர்க்கா?
கலைஞர் சிந்தனைகளில்
முதுகல்வி முடித்து
மு.க.அழகிரியில்
முனைவர் பட்டம் பெற்றவர்க்கா?
வல்லுநர் குழுவில்,
அத்வானியில்
முதுமுனைவர் முடித்தவர்க்கும்
சோனியா
இருக்கைத் தலைவருக்கும்
ஓத்த கருத்து இல்லாததால்
நேர்முகத் தேர்வு ரத்து.!
Wednesday, October 28, 2009
Saturday, October 17, 2009
வீர மரணங்கள் கொண்டாடத்தக்கன
வீர மரணங்கள் கொண்டாடத்தக்கன
மலையருவி
மரணம் கொண்டாடத்தக்கதா?
யுத்தம்
இரண்டு பக்கங்களைக் கொண்டது
தர்மம் அதர்மம்
நியாயம் அநியாயம்
நன்மை தீமை
சரி தவறு
தீர்மானிப்பது யார்?
அதிகாரம்,
எதிரியை
பயங்கரவாதி எனச் சுட்டும்
தீவரவாதி எனத் தீர்மானிக்கும்
ஒடுக்கப்பட்டவனுக்கு,
போராட நேர்ந்தவனுக்கு,
யுத்தத்திற்கு
நிர்ப்பந்திக்கப் பட்டவனுக்கு,
அவன் ஆயுதத்தை
எதிரி தீர்மானித்த பிறகு
அவன்
போர் வீரனாகிறான்
களத்தில்
மரணங்கள்
தவிர்க்கப்பட முடியாதவை
வாமனர்களால்
மகாபலிகள்
களப்பலி ஆனபிறகு
மரணங்கள் கொண்டாடப்படுகின்றன
ஏனெனில்
மாவீரர்களின் மரணங்கள்
விதைக்கப்படுகின்றன.
மலையருவி
மரணம் கொண்டாடத்தக்கதா?
யுத்தம்
இரண்டு பக்கங்களைக் கொண்டது
தர்மம் அதர்மம்
நியாயம் அநியாயம்
நன்மை தீமை
சரி தவறு
தீர்மானிப்பது யார்?
அதிகாரம்,
எதிரியை
பயங்கரவாதி எனச் சுட்டும்
தீவரவாதி எனத் தீர்மானிக்கும்
ஒடுக்கப்பட்டவனுக்கு,
போராட நேர்ந்தவனுக்கு,
யுத்தத்திற்கு
நிர்ப்பந்திக்கப் பட்டவனுக்கு,
அவன் ஆயுதத்தை
எதிரி தீர்மானித்த பிறகு
அவன்
போர் வீரனாகிறான்
களத்தில்
மரணங்கள்
தவிர்க்கப்பட முடியாதவை
வாமனர்களால்
மகாபலிகள்
களப்பலி ஆனபிறகு
மரணங்கள் கொண்டாடப்படுகின்றன
ஏனெனில்
மாவீரர்களின் மரணங்கள்
விதைக்கப்படுகின்றன.
Thursday, October 15, 2009
அரசியல் நாடகம் பார்க்கலாம் வாங்க!
அரசியல் நாடகம் பார்க்கலாம் வாங்க!
மலையருவி
நாடகம் பார்க்கலாம்
வாருங்கள்!
மேடையில்லாமல்
ஒப்பனையும் இல்லாமல்
நடக்குது நாடகம்
வெகு ஜோராய்!
இயக்குநர் தந்த
வசனப் புத்தகத்தின்
ஆறுதல் வசனங்கள்
பிழையின்றி
ஒப்புவிக்கப்படுகின்றன
அரிதாரம் பூசாத
நடிகர்கள் எல்லாம்
பாத்திரம் அறிந்து,
மிகையுமில்லாமல்
குறையுமில்லாமல்
கனகச்சிதமாய்
நடிப்பில்
வெளுத்துக் கட்டுகிறார்கள்
வேடிக்கை பார்க்கும்
வெட்கம் கெட்டதுகளோ?
எப்போதும் போலவே
விநோதமாய் ரசிக்குது!
முள்கம்பி வேலிகளுக்குள்
வதை முகாம்களில்
சிக்கி,
ஓர் உலகம்
விழிபிதுங்கி,
சேறும் இரத்தமுமாய்
சின்னா பின்னப்பட்டுக் கிடக்கயில்
நாடகம் நடக்குது நலமாக!!
மேடையில்லாமல்
ஒப்பனையும் இல்லாமல்
நடக்குது நாடகம்
வெகு ஜோராய்
மலையருவி
நாடகம் பார்க்கலாம்
வாருங்கள்!
மேடையில்லாமல்
ஒப்பனையும் இல்லாமல்
நடக்குது நாடகம்
வெகு ஜோராய்!
இயக்குநர் தந்த
வசனப் புத்தகத்தின்
ஆறுதல் வசனங்கள்
பிழையின்றி
ஒப்புவிக்கப்படுகின்றன
அரிதாரம் பூசாத
நடிகர்கள் எல்லாம்
பாத்திரம் அறிந்து,
மிகையுமில்லாமல்
குறையுமில்லாமல்
கனகச்சிதமாய்
நடிப்பில்
வெளுத்துக் கட்டுகிறார்கள்
வேடிக்கை பார்க்கும்
வெட்கம் கெட்டதுகளோ?
எப்போதும் போலவே
விநோதமாய் ரசிக்குது!
முள்கம்பி வேலிகளுக்குள்
வதை முகாம்களில்
சிக்கி,
ஓர் உலகம்
விழிபிதுங்கி,
சேறும் இரத்தமுமாய்
சின்னா பின்னப்பட்டுக் கிடக்கயில்
நாடகம் நடக்குது நலமாக!!
மேடையில்லாமல்
ஒப்பனையும் இல்லாமல்
நடக்குது நாடகம்
வெகு ஜோராய்
Saturday, October 3, 2009
மகாத்மா நீ இன்னும் சாகவில்லை!
மகாத்மா நீ இன்னும் சாகவில்லை!
மலையருவி
ஞானிகளுக்கும்
மகான்களுக்கும்
மகாத்மாக்களுக்கும்
ஒரு சாபமுண்டு!
போதனைகள்
பொய்க்கும் வரை
பூமியில் அவர்களுக்கு
மரணமில்லை
மகாத்மா!
அஹிம்சை
உன் வேதம்
இன்றுவரை
இது
ஹிம்சைகளால் ஆன உலகம்!
நீ பூதவுடல் துறந்து
அரை நூற்றாண்டுக்கும்
மேலாகலாம்.
உண்மைதான்!
ஆனாலும்
நீ இன்னும் சாகவில்லை!
மகாத்மா!
நீ வாயால் சொன்னதையும்
வாழ்ந்து சொன்னதையும்
நாங்கள்
காந்தீயம் என்போம்.!
உன் காந்தீயம்
என்றைக்குத்
தேவைப்படுவதில்லையோ?
அன்றைக்கு
உனக்கும் வேலையில்லை!
மகாத்மா!
அப்போது
நீ மரணமடைவாய்!
அதுவரை நீதான் சாகமாட்டாய்!
மலையருவி
ஞானிகளுக்கும்
மகான்களுக்கும்
மகாத்மாக்களுக்கும்
ஒரு சாபமுண்டு!
போதனைகள்
பொய்க்கும் வரை
பூமியில் அவர்களுக்கு
மரணமில்லை
மகாத்மா!
அஹிம்சை
உன் வேதம்
இன்றுவரை
இது
ஹிம்சைகளால் ஆன உலகம்!
நீ பூதவுடல் துறந்து
அரை நூற்றாண்டுக்கும்
மேலாகலாம்.
உண்மைதான்!
ஆனாலும்
நீ இன்னும் சாகவில்லை!
மகாத்மா!
நீ வாயால் சொன்னதையும்
வாழ்ந்து சொன்னதையும்
நாங்கள்
காந்தீயம் என்போம்.!
உன் காந்தீயம்
என்றைக்குத்
தேவைப்படுவதில்லையோ?
அன்றைக்கு
உனக்கும் வேலையில்லை!
மகாத்மா!
அப்போது
நீ மரணமடைவாய்!
அதுவரை நீதான் சாகமாட்டாய்!
Wednesday, September 9, 2009
ஏது தொடக்கம்! ஏது முடிவு! - மலையருவி
ஏது தொடக்கம்! ஏது முடிவு!
எங்கே தொடங்குவது?
எங்கே முடிப்பது?
தொடக்கப் புள்ளி தெரியாமல்
தேடித் தேடித்
தேடித் தளர்ந்தேன்
எங்கோ ஒரு இடத்தில்
எப்பொழுதோ ஒரு பொழுதில்
தொடங்கியிருக்க வேண்டுமே!
அந்தப் புள்ளி இல்லாமல் எப்படி?
முழுமைபெற்று
முடிந்து போகும்
அந்த முற்றுப் புள்ளி எங்கே?
தேடித் தேடித்
தேடித் தளர்ந்தேன்
ஏதோ ஒரு புள்ளியில்
என்றோ ஒரு பொழுதில்
முடிந்திருக்க வேண்டுமே!
அந்த முற்றுப்புள்ளி இல்லாமல் எப்படி?
***
எல்லாமே ஒரு வட்டம்
அதில்
மேலது கீழாய் கீழது மேலாய்
தொடக்கமே முடிவாய்
முடிவே தொடக்கமாய்
தொடக்கமுமின்றி
முடிவுமின்றி
இடைவெளி இன்றி
சுற்றி! சுற்றி!
சுற்றி! சுற்றி!
சுழற்சி!
ஏது தொடக்கம்! ஏது முடிவு!
எங்கே தொடங்குவது?
எங்கே முடிப்பது?
தொடக்கப் புள்ளி தெரியாமல்
தேடித் தேடித்
தேடித் தளர்ந்தேன்
எங்கோ ஒரு இடத்தில்
எப்பொழுதோ ஒரு பொழுதில்
தொடங்கியிருக்க வேண்டுமே!
அந்தப் புள்ளி இல்லாமல் எப்படி?
முழுமைபெற்று
முடிந்து போகும்
அந்த முற்றுப் புள்ளி எங்கே?
தேடித் தேடித்
தேடித் தளர்ந்தேன்
ஏதோ ஒரு புள்ளியில்
என்றோ ஒரு பொழுதில்
முடிந்திருக்க வேண்டுமே!
அந்த முற்றுப்புள்ளி இல்லாமல் எப்படி?
***
எல்லாமே ஒரு வட்டம்
அதில்
மேலது கீழாய் கீழது மேலாய்
தொடக்கமே முடிவாய்
முடிவே தொடக்கமாய்
தொடக்கமுமின்றி
முடிவுமின்றி
இடைவெளி இன்றி
சுற்றி! சுற்றி!
சுற்றி! சுற்றி!
சுழற்சி!
ஏது தொடக்கம்! ஏது முடிவு!
Friday, September 4, 2009
விருந்தோம்பலும் பந்தியும் -மலையருவி
விருந்தோம்பலும் பந்தியும்
மலையருவி
பந்தி என்பது பகரும் காலை
முதல், இடை, கடை என மூன்றாகும்மே
முதல் பந்தி
பார்க்க உசிதம்
விருந்து வகைகள்
ஒன்றும் குறையாமல்
ஒய்யாராமாக
அதனதன் இடத்தில்
அமர்ந்திருக்கும்
அழகே தனி அழகு
ஆனால்
எப்பொழுதோ பரிமாறி
ஆறி அவலாகிச்
சூடும் சுவையும் குன்றியிருக்கும்
கடைசிப் பந்தி
கவலை அளிக்கும்
விருந்துக்கு அழகாம்
வடை, அப்பளம், பாயாசம்
பருப்பு நெய்யெலாம்
பந்திக்குப் பந்தி
பற்றாக்குறையாகி
கடைசிப் பந்தியில்
கைவிரிக்கும்
இடைநிலைப் பந்திகளே
இனிமை சேர்ப்பன
ஆனாலும்
இடைநிலைப் பந்திகளில்
இருந்து சாப்பிட
முன் அனுபவங்கள்
ரொம்பவும் முக்கியம்
முந்தைய பந்தி
முடியும் வரிசையை
முழுதாய் அறிந்து
முண்டி நின்று
கண்கொத்திப் பாம்பாய்
கவனிக்க வேண்டும்
முன்னவர் உண்டு முடித்து
இலைமடித்து
எழுவுதற்குள்ளாக
அந்த இருக்கையில்
நுட்பமாய் உடலை
நுழைத்து அமரணும்
இல்லையென்றால்
கண்மூடி கண்திறப்பதற்குள்
பந்தி நிரம்பி -நம்மைப்
பார்த்துச் சிரிக்கும்
அடுத்த பந்திக்கும்
இதே நிலைதான்
கவனம் பிசகாமல்
இடம் பிடித்தபின்
எச்சில் இலை
முன்னே இருந்தாலும்
காணாதது போல்
கடமையில்
கண்ணாயிருக்கணும்
ஆயிற்று,
இலையெடுத்து
மேசை துடைத்து
வகையாய் இலைபோட்டு
வீசி எறிந்தும்
கொட்டியும் ஊற்றியும்
சிந்தியும் சிதறியும்
விருந்து பரிமாறும்
விந்தைமிகு பக்குவத்தில்
தமிழனின் விருந்தோம்பல்
தலைகுப்புற
வீழ்ந்து கிடப்பதைப் பற்றி
நமக்கென்ன கவலை!
மலையருவி
பந்தி என்பது பகரும் காலை
முதல், இடை, கடை என மூன்றாகும்மே
முதல் பந்தி
பார்க்க உசிதம்
விருந்து வகைகள்
ஒன்றும் குறையாமல்
ஒய்யாராமாக
அதனதன் இடத்தில்
அமர்ந்திருக்கும்
அழகே தனி அழகு
ஆனால்
எப்பொழுதோ பரிமாறி
ஆறி அவலாகிச்
சூடும் சுவையும் குன்றியிருக்கும்
கடைசிப் பந்தி
கவலை அளிக்கும்
விருந்துக்கு அழகாம்
வடை, அப்பளம், பாயாசம்
பருப்பு நெய்யெலாம்
பந்திக்குப் பந்தி
பற்றாக்குறையாகி
கடைசிப் பந்தியில்
கைவிரிக்கும்
இடைநிலைப் பந்திகளே
இனிமை சேர்ப்பன
ஆனாலும்
இடைநிலைப் பந்திகளில்
இருந்து சாப்பிட
முன் அனுபவங்கள்
ரொம்பவும் முக்கியம்
முந்தைய பந்தி
முடியும் வரிசையை
முழுதாய் அறிந்து
முண்டி நின்று
கண்கொத்திப் பாம்பாய்
கவனிக்க வேண்டும்
முன்னவர் உண்டு முடித்து
இலைமடித்து
எழுவுதற்குள்ளாக
அந்த இருக்கையில்
நுட்பமாய் உடலை
நுழைத்து அமரணும்
இல்லையென்றால்
கண்மூடி கண்திறப்பதற்குள்
பந்தி நிரம்பி -நம்மைப்
பார்த்துச் சிரிக்கும்
அடுத்த பந்திக்கும்
இதே நிலைதான்
கவனம் பிசகாமல்
இடம் பிடித்தபின்
எச்சில் இலை
முன்னே இருந்தாலும்
காணாதது போல்
கடமையில்
கண்ணாயிருக்கணும்
ஆயிற்று,
இலையெடுத்து
மேசை துடைத்து
வகையாய் இலைபோட்டு
வீசி எறிந்தும்
கொட்டியும் ஊற்றியும்
சிந்தியும் சிதறியும்
விருந்து பரிமாறும்
விந்தைமிகு பக்குவத்தில்
தமிழனின் விருந்தோம்பல்
தலைகுப்புற
வீழ்ந்து கிடப்பதைப் பற்றி
நமக்கென்ன கவலை!
Monday, August 31, 2009
பிள்ளையார் அரசியல் - மலையருவி
பிள்ளையார் அரசியல்
மலையருவி
விக்ன விநாயகா!
ஒரு விக்னமும் நேராம
உன்னைப் பத்தரமா கொண்டு போயி
கடல்ல கரைக்கறது என் பொறுப்பு
ஆனா!
நீதான் கொஞ்சம் ஒத்துழைக்கணும்
பக்தர்களாகிய
நம் தொண்டர்கள்
உற்சாகத்தில்
எல்லைமீறிப் போனாலும்
நீதான் கணேசா
கண்டுக்காம இருக்கணும்
வழியெல்லாம்
உன் அருமை பெருமைகளை
ஆடிப் பாடி
ஆர்ப்பாட்டம் செய்தாலும்
ஊரைக் கலக்கினாலும்
உனக்காகத் தானே கணபதி
ஒத்துக்கிட்டு பேசாம வா!
விஸ்வரூப தரிசன
விநாயகப் பெருமானே
கடலில் உனைக் கரைக்க
கஷ்டப்படும்
தொண்டனுக்குக்
கொஞ்சம் நீ ஒத்துழைச்சா
கட்சிக்கு நல்லது
கிரேனால தூக்கும் போதே
உன் கைகால்கள்
சிதைஞ்சிட்டா
பிள்ளையாரே
சிரமம் உனக்குமில்ல
சின்னவன் எனக்குமில்ல
உடைஞ்சி போகாம
அய்ந்து கரத்தானே!
நீ அழிச்சாட்டியம்
பண்ணாக்கா
கத்தியால உன்ன
கால் வேற கை வெறா
வெட்டறத தவிர வேற வழியில்ல
வெட்டுப்பட்ட பெறகும்
விக்னேஸ்வரா!
நீ கடலில் மூழ்கிக்
கரைஞ்சி போகலன்னா
ஏறி மிதிச்சித்தான்
ஏதனாச்சும் செய்யனும்
விக்ன விநாயகா!
ஒரு விக்னமும் நேராம
உன்னைப் பத்தரமா கொண்டு வந்து
கடல்ல கரைக்கறது என் பொறுப்பு
மலையருவி
விக்ன விநாயகா!
ஒரு விக்னமும் நேராம
உன்னைப் பத்தரமா கொண்டு போயி
கடல்ல கரைக்கறது என் பொறுப்பு
ஆனா!
நீதான் கொஞ்சம் ஒத்துழைக்கணும்
பக்தர்களாகிய
நம் தொண்டர்கள்
உற்சாகத்தில்
எல்லைமீறிப் போனாலும்
நீதான் கணேசா
கண்டுக்காம இருக்கணும்
வழியெல்லாம்
உன் அருமை பெருமைகளை
ஆடிப் பாடி
ஆர்ப்பாட்டம் செய்தாலும்
ஊரைக் கலக்கினாலும்
உனக்காகத் தானே கணபதி
ஒத்துக்கிட்டு பேசாம வா!
விஸ்வரூப தரிசன
விநாயகப் பெருமானே
கடலில் உனைக் கரைக்க
கஷ்டப்படும்
தொண்டனுக்குக்
கொஞ்சம் நீ ஒத்துழைச்சா
கட்சிக்கு நல்லது
கிரேனால தூக்கும் போதே
உன் கைகால்கள்
சிதைஞ்சிட்டா
பிள்ளையாரே
சிரமம் உனக்குமில்ல
சின்னவன் எனக்குமில்ல
உடைஞ்சி போகாம
அய்ந்து கரத்தானே!
நீ அழிச்சாட்டியம்
பண்ணாக்கா
கத்தியால உன்ன
கால் வேற கை வெறா
வெட்டறத தவிர வேற வழியில்ல
வெட்டுப்பட்ட பெறகும்
விக்னேஸ்வரா!
நீ கடலில் மூழ்கிக்
கரைஞ்சி போகலன்னா
ஏறி மிதிச்சித்தான்
ஏதனாச்சும் செய்யனும்
விக்ன விநாயகா!
ஒரு விக்னமும் நேராம
உன்னைப் பத்தரமா கொண்டு வந்து
கடல்ல கரைக்கறது என் பொறுப்பு
Subscribe to:
Posts (Atom)