Sunday, January 26, 2014

காவல்


மலையருவி - முனைவர் நா.இளங்கோ 

தம்பி வைக்கும்
ஒரு உருண்டை சோறும்,
அக்கா ஊற்றும்
அரை டம்ளர் பாலும்,
அப்பா மென்றுத் துப்பும்
எலும்புத் துண்டுகளும்,
அண்ணன் எப்போதாவது
எட்டி உதைக்கும் உதையும்
எங்கள் வீட்டுக்
கருப்புப் பூனைக்குப்
பழக்கமானதுதான்
ஆனால்
அம்மாவின்
புடவைக் கந்தலில்
விழி திறக்காது
சுருண்டுக் கிடக்கும்
எலிக் குஞ்சுகளுக்குக்
காவலாய் இருப்பது மட்டும்தான்
புதுசோ புதுசு.