Wednesday, October 28, 2009

சசிகலாவிலும் மு.க.அழகிரியிலும் முனைவர் பட்டமா?

முனைவர் நா.இளங்கோ

இனி வரப்போகும் ஒருநாளில்,

நேர்முகத் தேர்வு நடந்து முடிந்தது.

வல்லுநர் குழு
வட்டமாய் அமர்ந்து
முந்திரி கொறித்து
வேலைக்களத்தில்
வென்ற நபரை
அறிவிக்க முனைந்தது

மாநிலத்தில்
நெருக்கடி,
மத்தியில் ஆளும்
தேசியக் கட்சியோடு
ஒத்துப்போகாத
மாநிலஆட்சி கலைக்கப்பட்டு
குடியரசுத் தலைவர் ஆட்சி!

சிக்கலே அதனால்தான்!

இருப்பது ஒருபதவி
யாருக்குக் கொடுப்பது?

ஜெயலலிதா சிந்தனைகளில்
முதுகல்வி முடித்து
சசிகலாவில்
முனைவர் பட்டம் முடித்தவர்க்கா?

கலைஞர் சிந்தனைகளில்
முதுகல்வி முடித்து
மு.க.அழகிரியில்
முனைவர் பட்டம் பெற்றவர்க்கா?

வல்லுநர் குழுவில்,
அத்வானியில்
முதுமுனைவர் முடித்தவர்க்கும்
சோனியா
இருக்கைத் தலைவருக்கும்
ஓத்த கருத்து இல்லாததால்
நேர்முகத் தேர்வு ரத்து.!