Saturday, January 30, 2010

சாகும் வரைக்கும் வேண்டும் வேலை!

சாகும் வரைக்கும் வேண்டும் வேலை!

மலையருவி (முனைவர் நா.இளங்கோ)

தேய்த்த நாற்காலிகளை
விட்டுவிட
மனம் வரவில்லை

வயதான காலத்தில்
புது இடத்தில் நிம்மதியான
தூக்கம் வராதாம்

வீட்டில்
காய்கறி மளிகை ரேஷன்
வாங்கிச் சுமக்கும்
சிக்கலில் சிக்காமல்
தப்பிக்க நல்ல வழி

நாற்காலி
கேண்டீன்
கழிப்பறை
பழகிப்போனவைகள்

பணிஓய்வுக்குப் பின்னும்
பணி நீட்டிப்பு

வீட்டில் இருக்கும்
அந்தத் தெண்டத் தீவட்டி
மகனுக்கு
எம்பளாய்மண்ட் நியூஸ் பேப்பர்
மறக்காமல் வாங்கனும்