Saturday, October 17, 2009

வீர மரணங்கள் கொண்டாடத்தக்கன

வீர மரணங்கள் கொண்டாடத்தக்கன

மலையருவி

மரணம் கொண்டாடத்தக்கதா?

யுத்தம்
இரண்டு பக்கங்களைக் கொண்டது

தர்மம் அதர்மம்
நியாயம் அநியாயம்
நன்மை தீமை
சரி தவறு

தீர்மானிப்பது யார்?

அதிகாரம்,
எதிரியை
பயங்கரவாதி எனச் சுட்டும்
தீவரவாதி எனத் தீர்மானிக்கும்

ஒடுக்கப்பட்டவனுக்கு,
போராட நேர்ந்தவனுக்கு,
யுத்தத்திற்கு
நிர்ப்பந்திக்கப் பட்டவனுக்கு,
அவன் ஆயுதத்தை
எதிரி தீர்மானித்த பிறகு
அவன்
போர் வீரனாகிறான்

களத்தில்
மரணங்கள்
தவிர்க்கப்பட முடியாதவை

வாமனர்களால்
மகாபலிகள்
களப்பலி ஆனபிறகு

மரணங்கள் கொண்டாடப்படுகின்றன

ஏனெனில்
மாவீரர்களின் மரணங்கள்
விதைக்கப்படுகின்றன.