Tuesday, May 12, 2020

யுகங்கள் தோறும்…


யுகங்கள் தோறும்

       -மலையருவி



யுகங்கள் தோறும்
அழிக்கவும் ஆக்கவும்
நானே அவதரிப்பேன்

எல்லா யுகங்களிலும்
நானே இருப்பேன்
நீங்கள் இருப்பதும் கரைவதும்
என் விருப்பப்படியே

எனக்கென்று
உருவம் இல்லை
எனக்குப் பகையும் இல்லை
நட்பும் இல்லை
என்னை நம்புகிறவன்
தன்னைக் காத்துக் கொள்வான்

நான்
எவரிடமிருந்தும்
எளிதில் விலகுவதில்லை

என்னுள் எல்லாம் அடக்கம்
என் சிற்றுரு
பலநூறு கோடிகளில்
பல்லுரு கொள்ளும்
நான்
தூணிலும் இருப்பேன்
துரும்பிலும் இருப்பேன்

எப்பொழுதும்
என்னை
நினைத்துக் கொண்டே இரு
நீ காண்பன
தொடுவன
நுகர்வன
அனைத்திலும்
நானே சூட்சமமாய் இருக்கிறேன்

எவனொருவன்
கைகழுவி
வாய்பொத்தித்
தனித்திருக்கிறானோ
அவனை விட்டு
விலகியே இருப்பேன்

என்னை விட்டு
நீங்குபவன்
மகிழ்ந்திருப்பான்..
நிலைத்திருப்பான்..

சர்வம் கிருமி மயம்..