Sunday, December 8, 2019

முப்புரி நூல்

முனைவர் நா.இளங்கோ



கல்விக்கு
நூலோடு தொடர்புண்டு,
அது முப்புரி நூல்
என்கிறது மனு()தர்மம்.

பாத்திமா லத்தீப்பின்
தூக்குக் கயிற்றில்
எத்தனை எத்தனை
முப்புரி நூல்களோ?

காலம் காலமாய்த் திரிக்கப்பட்டு
இறுகி கனத்து
இன்னும்
எத்தனை உயிர் வாங்கக்
காத்திருக்கின்றனவோ!

நூல்.. நூல்.. நூல்..

- மலையருவி.