Sunday, December 19, 2010

எப்பிடி இருந்த நாம் இப்பிடி ஆயிட்டோம் !

-மலையருவி

மூன்று நாள்
மூட்டத்திற்குப் பின்
ஒருவழியாய்
மழை தொடங்கியது.

நல்ல வேளை
தீபாவளி தப்பித்தது.

முதலில்
சிறு மழைதான்..
விட்டு விட்டுப் பெய்தது.

அடுத்தநாள் காலை
அடைமழை தொடங்கியது.
வாரக் கணக்கில்..
மழை, மழை,
பேய்மழை.
மேகமுடைந்து
கொட்டித் தீர்த்தது

ஊர்
வெள்ளக் காடானது.
வயலாயிருந்த
குடியிருப்புகள்,
கொஞ்ச நஞ்சமிருந்த
விளைநிலைகள்
எல்லாம் ஏரிகளாயின.
ஏரிகள்
கடல்களாயின.

கபடி விளையாடிய
ஆற்று மணல்பரப்பில்
திடீர் வெள்ளம்.

போதுமா மழை?
போதும் போதும்பா!
இதுக்கே
இருபது முப்பது கிலோ
அரிசி போடுவாங்க..

இன்னும் கொஞ்சம்
ஊருக்குள்ளே
வெள்ளம் வந்தாதானே
மழை வெள்ள
நிவாரணம் கிடைக்கும்!

எப்பிடியும்
வீட்டுக்கு வீடு
ஆயிரம் ரூபா
போட மாட்டாங்களா?