Tuesday, March 2, 2010

நித்தியானந்தர்களின் நித்திய ஆனந்த லீலா விநோதங்கள்

நித்தியானந்தர்களின் நித்திய ஆனந்த லீலா விநோதங்கள்

மலையருவி

சாமியார்கள்
இரண்டுவகை

முதல்வகை,
போலிச் சாமியார்கள்.

இரண்டாம்வகை,
லீலைகள் இன்னும்
அம்பலமாகாத சாமியார்கள்

யாரைச்சொல்லி
யாரைநோக!

ஒருபாதி
மக்களின் அறியாமையும்
மறுபாதி
மக்களின் பேராசையுமே
இந்தப் போலிகளுக்கு
மூலதனம்

ஆண்டவன் பேரால்
நடக்கும்
அநாகரீகங்களும்
அநியாயங்களும்
அங்கீகரிக்கப்படுவது
எதனால்?

மதத்தின் பெயரால்!

ஒழிக்கப்பட வேண்டுவன எவை?

சாமியார்களா?
மதங்களா?